News July 25, 2024
BREAKING: ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு

தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது. பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடியவில்லை. இதனால், விரல் ரேகை மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக, கருவிழி பதிவு மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
எங்கு சென்றாலும் இந்தியாவை மறக்காதீங்க: CPR

அடுத்த கூகுள், டெஸ்லா நமது நாட்டில் உருவாக வேண்டும் என VP CPR கூறியுள்ளார். ஹரியானாவின் குருஷேத்ரா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், PM மோடி கொண்டுவந்த தேசிய கல்வி கொள்கை இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் & நாகரிகத்தில் வேரூன்றியுள்ளதாக புகழ்ந்துள்ளார். மேலும், இளைஞர்கள் எங்கு சென்றாலும், இந்தியா எப்போதும் இதயத்தில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
அகண்டா-2 டிக்கெட்டை ₹2 லட்சம் கொடுத்து வாங்கிய Fan

டிச.5-ல் அகண்டா 2 வெளியாகவுள்ளதால் உலகளவில் பாலையா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதன் ஒருபகுதியாக ஜெர்மனியை சேர்ந்த பாலையா ரசிகர் ஒருவர் இப்படத்தின் ஒற்றை டிக்கெட்டை ₹2 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அகண்டா 2 படத்தின் Super Fan Ticket-ஐ வேறொருவர் ₹1 லட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 1, 2025
தவெக வலையில் சிக்கும் அதிமுக சீனியர்கள்?

செங்கோட்டையனை வைத்தே இன்னும் சில அதிமுக சீனியர்களுக்கு தவெக வலைவீசி இருப்பதாக கூறப்படுகிறது. இதில், பொள்ளாச்சி ஜெயராமன், வைத்திலிங்கம்(OPS தரப்பு), வெல்லமண்டி நடராஜன்(OPS தரப்பு) தற்போது சிக்கியிருக்கிறார்களாம். இவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தையில் தவெக ஈடுபட்டுவருவதாக பேசப்படுகிறது. இவர்கள் தவெகவுக்கு சென்றால் அதிமுக ஒருங்கிணைப்புக்கு மேலும் பின்னடைவு வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


