News February 28, 2025
BREAKING: இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,414. புள்ளிகள் சரிந்து 73,198ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி குறியீடு 420 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 22,124ஆக வர்த்தகமானது. இந்திய பங்குச்சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீடுகளை வெளிநாட்டினர் தொடர்ந்து திரும்பப் பெறுவது உள்ளிட்டவையே சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
Similar News
News February 28, 2025
மயிலாடுதுறை கலெக்டருக்கு அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் மீது தவறு இருப்பதாக பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. அந்தவகையில், முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கலெக்டர் பேசியுள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் பழிபோட்டு, தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணம் என்று சாடினார்.
News February 28, 2025
சர்ச்சை கருத்து: மயிலாடுதுறை கலெக்டர் மாற்றம்

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, <<15609948>>சிறுமி தவறாலேயே<<>> அந்த சம்பவம் நடந்ததாகக் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, அவரை மாற்றி, அப்பதவியில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது.
News February 28, 2025
விஸ்கி, பீர் மிக்சிங் செய்து குடித்தால் என்ன நடக்கும்?

சிலருக்கு விஸ்கி குடிக்கும் பழக்கமும், சிலருக்கு பீர் குடிக்கும் பழக்கமும் இருக்கும். இந்த இரண்டும் வெவ்வேறு ஆல்கஹால் என்பதால் இரண்டையும் ஒன்றாக கலந்து குடிப்பது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாந்தி, பேதி மற்றும் தூக்கமின்மையை அது உண்டாக்கும். அதேபோல், உடல்நலனில் மேலும் பல எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். ஆதலால் விஸ்கி, பீர் இரண்டையும் கலந்து குடிப்பதை தவிர்ப்பதே நல்லது.