News September 14, 2025
BREAKING: கனமழை கொட்டித் தீர்க்கும்.. அலர்ட்

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 17-ல் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 20-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், கவனமாக இருங்க நண்பர்களே!
Similar News
News September 14, 2025
விஜய் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?

தமிழ்நாட்டுக்கு இதுவரை எந்த நன்மையையாவது விஜய் செய்துள்ளாரா என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். ₹200 – ₹300 கோடி சம்பளம் வாங்கும் விஜய் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை எனக் கூறிய அவர், வெறுமென அரசை கேள்வி கேட்பது சரியல்ல எனவும் தெரிவித்தார். மத்திய அரசு கொடுக்கும் இடையூறுகளை தாண்டி, CM ஸ்டாலின் மக்களுக்கு நலத் திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
News September 14, 2025
‘நாங்க சாகப் போறோம்.. SORRY’

‘நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம். மன்னித்துவிடுங்கள். உங்களை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. சாவுக்கு யாரும் காரணமில்லை’. கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சாக்ஷி சாவ்லா(37), மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவனுக்கு கடைசியாக எழுதிய வரிகள் இவை. மகனின் நிலையால் ஏற்பட்ட மன அழுத்தமே 2 பேரின் சாவுக்கும் காரணமாக அமைந்துள்ளது. So Sad.
News September 14, 2025
நாளையே கடைசி: உதவித்தொகையுடன் வேலை

திருச்சி BHEL நிறுவனத்தில் உள்ள 760 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பதவிக்கேற்ப ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு. வயது வரம்பு: 18 – 27. டிப்ளமோ முடித்தவர்களுக்கு ₹11,000, டிகிரி முடித்தவர்களுக்கு ₹12,000 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <