News September 8, 2025
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (செப்.8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. TN-ல் அதிகபட்சமாக விருதுநகர் கோவிலன்குளம், அருப்புக்கோட்டையில் தலா 7CM மழையும், புதுக்கோட்டை, நாகுடி, மணமேல்குடி, அரிமளம், கீரனூரில் தலா 7CM மழையும் பதிவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழையா?
Similar News
News September 8, 2025
பிறந்த சிசுவை கடித்து குதறிய தெருநாய்கள்

தெரு நாய்கள் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், தெருநாய்களிடம் சிக்கிய பிஞ்சு குழந்தையின் தலையை தவிர மற்ற அனைத்து உறுப்புகளையும் தெருநாய்கள் தின்ற கோர சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது. GH நுழைவாயில் அருகே பிறந்து ஒருநாளே ஆன, சிசுவின் உடலை தாய் குப்பையில் வீசி சென்றுள்ளார். அந்த பிஞ்சு உடலை மற்றவர்கள் மீட்பதற்குள், தெருநாய்கள் கடித்து குதறிய காட்சி, பார்ப்பவர்களின் மனதை ரணமாக்குகிறது.
News September 8, 2025
SCIENCE: உங்கள் மூளைக்கு வலி தெரியாது. ஏன் தெரியுமா?

உடலில் எங்கு வலித்தாலும், அதை மூளையால் உணரமுடிகிறது. ஆனால், மூளையில் ஏற்படும் வலி நமக்கு தெரிவதே இல்லை. ஏனென்றால், மூளையில் வலியை உணரும் ‘நோசிசெப்டர்’ நரம்புகள் இல்லை. இதனால்தான் ஒருவர் விழித்திருக்கும்போதே மூளை சர்ஜரிகளை செய்யமுடிகிறது. இது உண்மையென்றால் தலைவலி எப்படி ஏற்படுகிறது என நீங்கள் கேட்கலாம். தலை & கழுத்திலுள்ள நரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாவதால்தான் தலைவலி ஏற்படுகிறது. SHARE.
News September 8, 2025
நாளை முக்கிய முடிவு… அறிவித்தது திமுக

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை நண்பகல் 12 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து ஸ்டாலின் திரும்பிய நிலையில், நாளை நடைபெறவுள்ள மா.செ. கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.