News September 30, 2024
BREAKING: 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாள்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News August 11, 2025
ரோஹித்- கோலியின் Future? கங்குலி பதில்!

2027 ODI WC-ல் ரோஹித் & கோலியை விளையாட வைக்க BCCI விரும்பவில்லை என்றும், அவர்கள் இந்த ஆண்டே ODI-ல் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இருவரும் நன்றாக ரன்குவிக்கும் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் எனக் கூறினார். மேலும், இருவரும் ODI-ல் நிறைய சாதித்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
News August 11, 2025
அதிமுக ஆட்சியில் திருப்பூர் புறக்கணிக்கப்பட்டது: CM

திருப்பூர் மாவட்டத்தில் ₹950 கோடியில் முடிவுற்ற 61 திட்டப்பணிகளை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ADMK ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். DMK ஆட்சியில் ₹10,491 கோடியில் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். அத்திக்கடவு-அவிநாசி திட்டமும் DMK ஆட்சியில்தான் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
US செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் இஸ்ரோ

அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் 2 மாதங்களில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். 6,500 கிலோ எடையுள்ள பிளாக்-2 ப்ளூபேர்டு செயற்கைக்கோள் 2 மாதங்களில் விண்ணில் ஏவப்படும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே ஜூலை 30-ம் தேதி நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த <<17251055>>NISAR <<>>செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது குறிப்பிடத்தக்கது.