News February 25, 2025

BREAKING: 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

பல்வேறு மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மறுநாள் (பிப்.27) தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், பிப்.28இல் சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். 1ம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என IMD குறிப்பிட்டுள்ளது.

Similar News

News February 25, 2025

#FairDelimitationForTN ட்ரெண்டிங்

image

#FairDelimitationForTN என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 2026இல் மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு மாற்றம் செய்யும்போது, தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளை 39-ல் இருந்து 31ஆக குறைக்கும் அபாயம் உள்ளது. இதனால், தமிழ்நாட்டுக்கு அரசியல் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்படும் என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்படுகிறது.

News February 25, 2025

5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4இல் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் மகா சிவராத்திரிக்கும் (பிப்.26), மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவுக்கும் (மார்ச் 11) உள்ளூர் விடுமுறையாகும். விழுப்புரத்தில் அங்காளம்மன் காேயில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 25, 2025

தோனியே கேப்டனாக இருந்தாலும்.. சானா சாடல்

image

INDக்கு எதிரான போட்டிக்கான PAK அணியை அறிவித்த போதே, அந்த அணி தோல்வி அடைந்துவிட்டதாக PAK மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சானா மிர் விமர்சித்துள்ளார். தோனி போன்ற தலைசிறந்த கேப்டனால் கூட இப்படி ஒரு அணியை வைத்து வெல்ல முடியாது எனவும், 2 பார்ட் டைம் பவுலர்களை வைத்து போட்டியை எதிர்கொண்டதே தவறு எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், PCB நிர்வாகத்தில் முழுமையான மாற்றம் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!