News September 3, 2025
BREAKING: ஜிஎஸ்டி வரம்பில் 12%, 28% நீக்கம்

ஜிஎஸ்டி வரியில் 12% மற்றும் 28% வரம்புகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இனி 5%, 18% வரம்புகள் மட்டுமே தொடரும் என்றும், சிறப்பு வரி விதிப்பாக 40% வரம்பு அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்த மாற்றம் செப்.22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
செங்கோட்டையனுக்கு ஆதரவு கரம் நீட்டிய நயினார்

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் கூறியதை வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரிந்துள்ள அனைவரும் இணைந்து, அதிமுக கூடுதல் வலிமை பெற வேண்டும் என்பதே தனது கருத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். சசிகலா, OPS, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும் என அடுத்தடுத்து பலரும் கருத்து தெரிவித்து வருவதால், இது EPS-க்கு கூடுதல் அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News September 5, 2025
செங்கோட்டையனுக்கு துணையாக நிற்போம்: OPS

அதிமுக தொண்டர்கள் மனதில் நினைத்துள்ளதை செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளதாக OPS கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என நினைக்கும் செங்கோட்டையனுக்கு, உறுதுணையாக நிற்போம் எனவும் அவர் கூறியுள்ளார். தொண்டர்கள் பிரிந்துள்ளதால் 4, 5 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற முடியவில்லை என்றும், தேர்தலில் வெற்றி பெற பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News September 5, 2025
அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கப்பட்டார்: செங்கோட்டையன்

2009-ல் கட்சி பொறுப்பில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் இபிஎஸ் என செங்கோட்டையன் அதிரடி கருத்தை முன்வைத்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் மனம் திறந்து பேசிய அவர், தென்மாவட்டங்களில் வரும் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற, பிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதில் எவ்வித தவறும் இல்லை என்றார்.