News November 30, 2024

BREAKING: மின்கட்டணம் குறித்து அரசு முக்கிய அறிவிப்பு

image

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக 4 மாவட்டங்களில்
EB கட்டணம் செலுத்த அரசு கால அவகாசம் அளித்துள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருவதால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மின்கட்டணம் செலுத்த டிச.10ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 21, 2025

5% தள்ளுபடியில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்: ரஷ்யா

image

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதால் இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ளது USA. இருப்பினும் கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும் என இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா அறிவித்துள்ளார். USA-ன் பல்வேறு வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியிலும் இருநாடுகளுக்கும் இடையேயான எரிபொருள் ஒத்துழைப்பு தொடரும் என்று ரஷ்ய துணை தூதரக தலைவர் ரோமன் பாபுஷ்கின் கூறியுள்ளார்.

News August 21, 2025

‘பரசுராம்புரி’யாக மாறிய உ.பி.யின் ஜலாலாபாத்

image

உ.பி.யின் ஜலாலாபாத் நகரம் ‘பரசுராம்புரி’ என பெயர்மாற்றம் செய்யப்படுகிறது. விஷ்ணுவின் அவதாரமான ’பரசுராம்’ ஜலாலாபாத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. எனவே, இந்நகரத்தின் பெயரை மாற்றக் கோரி உ.பி.யின் தலைமை செயலாளர் கடிதம் எழுதிய நிலையில், அதனை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுள்ளது. 1550-ல் முகலாயப் பேரரசர் ஜலால்-உத்-தின் முகமது அக்பரின் நினைவாக, இப்பகுதிக்கு ஜலாலாபாத் என பெயரிடப்பட்டு இருந்தது.

News August 21, 2025

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு: NIA அதிரடி

image

PMK நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக 9 இடங்களில் நேற்று NIA சோதனை நடத்தியது. இதில், கொடைக்கானலில் பிரியாணி கடை நடத்தி வந்த இம்தாதுல்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட PFI அமைப்புடன் அவர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான 3 போலீஸ் அதிகாரிகளை தனது ஹோட்டலில் தங்க வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

error: Content is protected !!