News February 24, 2025
BREAKING: அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

திட்டமிட்டபடி நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முடிவு எடுத்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்த ஐகோர்ட், எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், 11 லட்சம் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட தலைநகரில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 25, 2025
தோல்வி எதிரொலி: பயிற்சியாளரை நீக்க PCB முடிவு

CT தொடரில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஆகிப் ஜாவித்தை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு (PCB) செய்துள்ளது. CT தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணியிடம் PAK தோல்வி அடைந்ததால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. இதனால் அதிருப்தியான PCB, இடைக்கால தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளரை விடுவிக்க முடிவு செய்துள்ளது.
News February 25, 2025
இன்றைய (பிப். 25) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 25 ▶மாசி – 13 ▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM- 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 PM- 01:30 PM
▶திதி: திரயோதசி ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை
▶நட்சத்திரம் : உத்திராடம் மா 5.11
News February 25, 2025
தினமும் மோடியின் டிபன் என்ன தெரியுமா?

ஆண்டுக்கு 300 நாள்கள் டிபனுக்கு மக்கானாவைதான் சாப்பிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்கானா என்பது அல்லி மலரின் விதைகள் ஆகும். வட இந்திய மக்கள் இதனை அதிகளவில் சாப்பிடுகின்றனர். ஊட்டச்சத்து மிக்க இந்த உணவின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பட்ஜெட்டில் மக்கானா வாரியம் அமைப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தினமும் காலையில் அதைதான் உட்கொள்வதாக மோடியே தற்போது பேசியிருக்கிறார்.