News March 14, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்வு

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை 1 கிராம் தங்கம் ரூ.110 உயர்ந்தது. பின்னர் மாலை ரூ.70 அதிகரித்தது. அதாவது, 1 கிராம் விலை இன்று ஒரே நாளில் ரூ.180 உயர்ந்தது. இதையடுத்து, 1 கிராம் தங்கம் ரூ.8,300ஆகவும், சவரன் ரூ.66,400ஆகவும் விற்கப்படுகிறது. 1 சவரன் தங்கம் விலை ரூ.66 ஆயிரத்தை தாண்டியது, நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Similar News
News March 12, 2026
+2 மாணவி வன்கொடுமை.. கனிமொழி கொடுத்த ரியாக்சன்!

தூத்துக்குடியில் பள்ளி <<19356260>>மாணவி பாலியல் வன்கொடுமை<<>> செய்து கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிப்பதாக கனிமொழி கூறியுள்ளார். மேலும், இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் எனவும் கூறியுள்ளார். இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற +2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம் TN-ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 12, 2026
இஸ்ரேலை அழிப்போம்: ஈரான்

ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ராணுவ ஆலோசகர் ரஹீம் சஃபாவி, இஸ்ரேலை நிச்சயம் அழிப்போம் என்று சபதம் எடுத்துள்ளார். மத்திய கிழக்கில் இஸ்ரேலும் ஈரானும் ஒரே சமயத்தில் நிலைத்திருக்க சாத்தியமில்லை என்றும், இரண்டில் ஒன்று மட்டுமே இருக்க முடியும் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், டிரம்ப் மோசமான மற்றும் முட்டாள்தனமான அமெரிக்க அதிபர் என்றும் விமர்சித்தார்.
News March 12, 2026
கரூர் துயர வழக்கில் எனக்கு நோட்டீஸா? செந்தில் பாலாஜி

கரூர் வழக்கில் CBI தனக்கு சம்மன் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இருப்பினும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்ற அவர், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறித்து சிலர் விமர்சிப்பது ஏன் என கேட்டுள்ளார். மேலும், கரூர் சம்பவம் நடந்த பிறகு ஹாஸ்பிட்டலுக்கு வந்த அனைவருக்குமே சம்மன் அனுப்பியிருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


