News September 9, 2025
BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு

தமிழகத்தில் சாதி (அ) வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடையே தூண்டும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புகார்கள் உறுதியானால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் ‘மகிழ் முற்றம்’ எனும் மாணவர் குழு அமைப்பை உருவாக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
ஜெயக்குமார் தவெகவுக்கு வரலாம்: செங்கோட்டையன்

Ex அமைச்சர் ஜெயக்குமாருக்கு இந்த முறை அதிமுகவில் சீட் கிடைக்காது என செங்கோட்டையன் கூறியுள்ளார். இதனால் தவெகவுக்கு ஜெயக்குமார் வரலாம் என ஆஃபர் கொடுத்த அவர், தவெகவுக்கு சென்றுவிடுவேன் என திமுகவை மிரட்டி தான் காங்கிரஸ் அதிக தொகுதிகளை வாங்கியுள்ளதாகவும் பேசியுள்ளார். இதனால் ஜெயக்குமார், செங்கோட்டையனின் ஆஃபரை ஏற்பாரா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
News March 5, 2026
EB பிரச்னையா? இங்கே புகாரளித்தால் உடனடி தீர்வு!

உங்கள் பகுதியில் Transformer வெடிச்சிடுச்சா? கம்பம் விழுந்துருச்சா? மின் கட்டணம் அதிகமா காட்டுதா? கவலைய விடுங்க. மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களுக்கும், தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம். அப்படி இல்லையெனில் இதற்காகவே TNEB Mobile App செயலி இருக்கிறது. இதில் புகாரளிக்கும் பட்சத்தில் உடனடியாக பிரச்னைகள் சரிசெய்து தரப்படும். SHARE.
News March 5, 2026
ராஜ்யசபா வேட்பாளர் எல்.கே.சுதீஷ்: பிரேமலதா

தேதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் எல்.கே.சுதீஷ் போட்டியிடவுள்ளதாக பிரேமலதா அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கும், காங்கிரஸுக்கும் தலா ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இதில் காங்., சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிடும் நிலையில், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் களமிறக்கப்பட்டுள்ளார். திமுகவில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


