News March 18, 2025

BREAKING: அதிகாலையில் மீனவர்கள் கைது

image

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அதிகாலையில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி விசைப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டனர். தொடரும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Similar News

News March 18, 2025

3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: IMD

image

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமானது வரை மழை பெய்ய கூடும் என IMD கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால், அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2–3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

News March 18, 2025

ரஷ்யாவை மிரள வைக்கும் ரகசியம் என்ன? (1/2)

image

போர்க்களம் மாறலாம், போர்கள் தான் மாறுமா? என்பார்கள். ஆனால் போர் வடிவம் இப்போது மாறிவிட்டது. அதற்கு உக்ரைன் – ரஷ்யா இடையே நடக்கும் போர் உதாரணம். அமெரிக்காவுக்கே ரஷ்யா அச்சுறுத்தலாக இருந்தாலும், தன்னிடம் இருக்கும் நவீன தொழில்நுட்பத்தை வைத்து ரஷ்யாவையே மிரள வைத்து வருகிறது உக்ரைன். அப்படி என்ன மாதரியான ஆயுதத்தை இந்த போரில் உக்ரைன் பயன்படுத்தி இருக்கிறது தெரியுமா? ட்ரோன்கள்தான்…

News March 18, 2025

ரஷ்யாவை மிரள வைக்கும் ரகசியம் என்ன? (2/2)

image

ட்ரோன்களை தரையில் பயன்படுத்தும் உத்திதான் உக்ரைனுக்கு கச்சிதமாக கைகொடுத்திருக்கிறது. அதில் மிக முக்கியமானது டிரக்குகள் போல இருக்கும் ட்ரோன்கள். இவை ரஷ்ய எல்லைக்குள் புகுந்து குண்டுகள் வைப்பது, கண்ணிவெடிகளை புதைப்பது என மிரள வைக்கிறது. வீரர்களுக்கு தேவையான உணவு, ஆயுதங்களையும் கொண்டு செல்கிறது. தொழில்நுட்பங்கள் வளர, வளர, போர் தந்திரங்களும் மாறுகின்றன!

error: Content is protected !!