News September 4, 2025
BREAKING: கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ஓய்வு

சுழற்பந்து வீச்சில் தனக்கென தனி இடம் பிடித்த அமித் மிஸ்ரா அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 42 வயதாகும் அமித் மிஸ்ரா, இதுவரை 22 டெஸ்ட், 36 ODI மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அமித் மிஸ்ரா டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட IPL அணிகளிலும் விளையாடி விக்கெட்களை குவித்துள்ளார்.
Similar News
News September 4, 2025
GST மாற்றத்தால் ஏழைகளுக்கு பயன்: ராமதாஸ் வரவேற்பு

மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையை ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களின் மீதான வரிகளைக் குறைத்ததன் மூலம், ஏழை பாட்டாளிகள் மீதான பணச்சுமை குறைவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக மத்திய அரசை பாராட்டலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
BREAKING: இலங்கை தமிழர்கள் இனி சட்டப்பூர்வமாக தங்கலாம்

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவில் நுழைந்து அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்கலாம். அண்மையில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின்(INA) கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. TN-ல் சுமார் 80,000 பேர் அகதிகளாக உள்ளனர்.
News September 4, 2025
தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களுக்கு ஆபத்து!

Carbon Emission, புவி வெப்பமயமாதலால் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. இதில், சென்னை உள்பட 7 மாவட்டங்கள் அபாய கட்டத்தில் உள்ளன. அண்ணா பல்கலை.,யின் காலநிலை, பேரிடர் மேலாண்மை மையத்தின் Prof.ராமச்சந்திரன் கூறுகையில், 1991 – 2023 வரை ஏற்பட்ட புயல், காலநிலை புள்ளி விவரங்களின் படி, 2100-ம் ஆண்டில் கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் 25 CM கடல் மட்ட உயர்வு இருக்குமாம். உஷார்!