News March 13, 2025
BREAKING: சென்னையில் குடும்பமே தற்கொலை

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக, டாக்டர் பாலமுருகன், அவரது மனைவி, இரண்டு மகன்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். 4 பேரின் உடலையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News July 10, 2025
1,996 ஆசிரியர் பணியிடங்கள்… உடனே விண்ணப்பிங்க

அரசுப் பள்ளிகளில் 1,996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் 216, ஆங்கிலம் 197, கணிதம் 232, இயற்பியல் 233, வேதியியல் 217 பணியிடங்கள் உள்பட 1996 இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் இன்று முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
REWIND: ரஜினி, கமல் பட நடிகையின் துயர மரணம்

ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்தவர் நிசா நூர். பாலசந்தர், விசு உள்ளிட்டோரின் இயக்கத்திலும் அவர் நடித்துள்ளார். இதில் ஸ்ரீ ராகவேந்திரா, டிக் டிக் டிக், இளமை கோலம், எனக்காக காத்திரு, கல்யாண அகதிகள் படங்கள் முக்கியமானவை ஆகும். பிரபல நடிகர்களுடன் நடித்தும் உச்சம் செல்லாத நிசா, வறுமை நிலை சென்றார். விபசாரத்திலும் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எய்ட்ஸ் வந்து உயிரிழந்தார்.
News July 10, 2025
மகளிர் உரிமை திட்ட விதிகள் தளர்வு.. உதயநிதி தகவல்

மகளிர் உரிமைத் திட்ட விதிகளை CM ஸ்டாலின் தளர்த்தியிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம், கடந்த 22 மாதங்களாக
1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், இந்த திட்டத்தில் இன்னும் புதிதாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் உதயநிதி கூறினார்.