News October 3, 2025
BREAKING: அடுத்தடுத்து கட்சி பதவியை பறிக்கும் இபிஎஸ்

செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவரின் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை EPS தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், செங்கோட்டையன் ஆதரவாளர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியதுடன், ஏ.கே.செல்வராஜ் ஆதரவாளர்கள் 35 பேருக்கு பொறுப்புகளை வழங்கியுள்ளார். கட்சியில் செங்கோட்டையன் ஆதரவு வட்டத்தை குறைக்கும் வகையில், தற்போது இந்த மாற்றங்களை EPS செய்திருக்கிறார்.
Similar News
News October 3, 2025
பணம் வந்திருச்சு.. வாழ்க்கை போயிருச்சு!

சேமித்தால் பிற்காலத்தில் நிம்மதியாக வாழலாம் என நம்பியவர், ₹4 கோடி சேர்த்தாலும், நிம்மதி இன்றி தவிக்கிறார். ஜப்பானை சேர்ந்த சூசுகி(67), வாழ்வில் ஒன்றுமே அனுபவிக்கவில்லை. தற்போது மனைவி இறந்துவிட, அவருடன் நல்ல ஹோட்டலுக்கு கூட போனதில்லை என வருந்துகிறார். பிள்ளையுடன் அவருக்கு சந்தோஷமான நினைவுகளே இல்லையாம். சிக்கனமாக இருந்து வாழ்க்கையை தொலைத்ததாக புலம்புகிறார். இந்த விஷயத்தில் நீங்க என்ன சொல்றீங்க?
News October 3, 2025
தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமின் மறுப்பு

தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாருக்கு முன்ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா என்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா எனவும் மா.செ., சதீஷ்குமாருக்கு மெட்ராஸ் HC கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தவெகவினர் செயல்பாடுகளால் ₹5 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 3, 2025
டெல்லிக்கு வர MP-க்களுக்கு அழைப்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவை அனைத்து கட்சி கூட்டம் அக்.7-ம் தேதி நடைபெறவுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவுள்ளதால், அது குறித்து ஆலோசனை நடத்த தலைநகரில் அனைத்து கட்சி MP-க்களின் பிரதிநிதிகள் கூடுகின்றனர். மாநிலங்களவை தலைவர்
சி.பி.ராதாகிருஷ்ணனின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், GST, USA வரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம்.