News October 15, 2025

BREAKING: வெளிநடப்பு செய்தார் இபிஎஸ்

image

கரூர் விவகாரத்தில் பேரவையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். கரூர் துயரம் பற்றிய விவாதத்தின்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டார். இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி, CM இருக்கை அருகிலேயே தரையில் அமர்ந்து EPS உள்ளிட்ட அதிமுக MLA-க்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பாவுவை கண்டித்தும் அவர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Similar News

News October 15, 2025

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: IMF கணிப்பு

image

ஐநா சபையின் நிதி பிரிவு அமைப்பாக செயல்பட்டு வரும் IMF, இந்தியாவின் நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.6%-ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. இது ஏற்கெனவே கணிக்கப்பட்ட 6.4%-ல் இருந்து 0.2% அதிகமாகும். இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு உள்பட பல்வேறு சவால்கள் உள்ளபோதும், இந்திய பொருளாதாரம் வலிமையாக உள்ளதாக IMF தெரிவித்துள்ளது.

News October 15, 2025

கரூரில் பாதுகாப்பு குறைபாடா? CM பேரவையில் விளக்கம்

image

கரூர் துயரத்துக்கு காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என சட்டப்பேரவையில் EPS குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்து பேசிய, ஸ்டாலின் விஜய்யே காவல்துறைக்கு சல்யூட் என கூறிவிட்டுதான் தனது பேச்சை தொடங்கியதாக கூறியுள்ளார். விஜய்யே காவல்துறையை பாராட்டி இருக்கும்போது, பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்று EPS சொல்லவது எப்படி சரியாக இருக்கும் என CM கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 15, 2025

தொடர்ந்து சரியும் IPL-ன் மவுசு!

image

பணம் கொழிக்கும் கிரிக்கெட் தொடரான IPL-ன் சந்தை மதிப்பு சரிந்து வருகிறது. 2023-ல் ₹93,500 கோடியாக இருந்த IPL-ன் மதிப்பு, 2024 சீசனில் ₹82,700-ஆகவும், 2025-ல் மேலும் ₹6,600 கோடி குறைந்து, தற்போது ₹76,100 கோடியாகவும் உள்ளது. ஆன்லைன் மணி கேம்கள் தடை செய்யப்பட்டது, ஒரே நிறுவனத்துக்கு மீடியா உரிமை அளிக்கப்பட்டது இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாகும். உங்களுக்கும் IPL ஆர்வம் குறைந்துவிட்டதா?

error: Content is protected !!