News October 4, 2025
BREAKING: இபிஎஸ்க்கு அனுமதி மறுப்பு

நாளை திருச்செங்கோடு, குமாரபாளையத்திலும், நாளை மறுநாள் நாமக்கல், பரமத்திவேலூரிலும் ரோடு ஷோ செல்ல இபிஎஸ் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கரூர் துயர வழக்கில் நெடுஞ்சாலைகளில் பரப்புரை செய்ய அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, இபிஎஸ் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து, பரப்புரை கூட்டத்துக்கான மாற்று இடத்தை தேர்வு செய்ய இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.
Similar News
News October 4, 2025
நீரவ் மோடிக்கு சகல வசதிகளும் கொண்ட சிறை

நீரவ் மோடியிடம் ₹13,000 கோடி PNB வங்கி மோசடி குறித்து விசாரிக்கப்பட மாட்டாது என UK அரசிடம் இந்திய அரசு உறுதியளித்துள்ளது. மேலும், சகல வசதிகளையும் கொண்ட தரமான சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய சிறைகளின் நிலையை கருத்தில் கொண்டு, நீரவ் மோடியை நாடு கடத்த UK கோர்ட் தயக்கம் காட்டியது. இதேபோல், பெல்ஜியத்தில் உள்ள அவரது உறவினர் மெகுல் சோக்ஸிக்கும் இந்திய அரசு உறுதியளித்தது.
News October 4, 2025
மெக்னீசியம் குறைவா இருக்கா?

மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றான மெக்னீசியம், 300-க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம் குறைவாக இருந்தால், தசை வலி, சோர்வு, மன அழுத்தம், தூக்கம் குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். மேலே மெக்னீசியம் நிறைந்த உணவுகளை, போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத வேறு ஏதேனும் உணவு, உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News October 4, 2025
பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சி தகவல் வெளியானது

அசாம் பாடகர் <<17761763>>ஜுபின் கார்க்<<>> மர்ம மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜுபின் கார்க்கின் மேனேஜரும், சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் இணைந்து அவருக்கு விஷம் கொடுத்து கொன்றதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரில் ஒருவரான சேகர் ஜோதி கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இதனை விபத்துபோல் சித்தரிக்கவே, கொலையாளிகள் வெளிநாட்டில் வைத்து கொலையை அரங்கேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.