News December 3, 2024
BREAKING: முட்டை விலை கிடுகிடுவென உயர்வு

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.90ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 54 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை விலை ரூ.5.90ஆக உயர்ந்தது இதுவே முதல்முறை. முட்டை நுகர்வு, விற்பனை அதிகரித்துள்ளதால், கடந்த 4 நாட்களில் 25 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் அமலுக்கு வரும்.
Similar News
News September 10, 2025
இணக்கத்தை விரும்பும் தமிழகம்: ராஜகண்ணப்பன்

சில விஷயங்களில் மத்திய அரசு முரண்டு பிடிப்பதால், நாமும் முரண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது; ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்ற மனப்பான்மையே தமிழக அரசுக்கு உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் எனக் கூறிய அவர், நிதிநிலை மோசமாக இருந்தாலும் மக்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
News September 10, 2025
USA வரி குறைய வாய்ப்பா? டிரம்ப் கூறிய விஷயம்

PM மோடியிடம் வர்த்தகம் குறித்து வரும் வாரங்களில் பேசவுள்ளதாக US அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். PM மோடியை நல்ல நண்பர் என குறிப்பிட்ட அவர், இருநாடுகளுக்கும் ஏற்றார் போல முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியா மீதான USA வரிக்கு அமெரிக்கர்களே எதிர்ப்பு தெரிவித்ததால் டிரம்ப் தற்போது இறங்கிவந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தியா மீதான USA வரி குறைக்கப்படுமா? பார்ப்போம்..
News September 10, 2025
நயினாரிடம் எனது மொபைல் எண் உள்ளது: OPS சூசகம்

EPS-ஐ தவிர யாரை CM வேட்பாளராக அறிவித்தாலும் NDA கூட்டணியில் மீண்டும் இணையத் தயார் என்று TTV சிக்னல் கொடுத்துவிட்டார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனிடம் என்னுடைய மொபைல் எண் உள்ளது, அவர் என்னை அழைத்தால் சந்திக்க தயார் என்று OPS-ம் கூறியுள்ளார். இதனிடையே, டெல்லி சென்று திரும்பிய செங்கோட்டையனோ, அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அமித்ஷாவிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வலுப்பெறுமா?