News October 13, 2025
BREAKING: தமிழகத்தில் ED அதிகாரிகள் அதிரடி ரெய்டு

மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தமிழகத்தில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் வீடு, தமிழக அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீபா ஜோசப், கார்த்திகேயன் வீடுகளில் அதிகாலை முதலே இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த வழக்கில் 2 அதிகாரிகளை TN அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தது.
Similar News
News April 3, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் முழு ஆண்டு தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்.10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார். அதேபோல், தேர்தலையொட்டி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஏப்.6 முதல் 10 வரை விடுமுறை அளித்து அம்மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
News April 3, 2026
அண்ணாமலைக்கு வாய்ப்பு தராதது ஏன்? பியூஷ் கோயல்

அண்ணாமலைக்கு தேர்தலில் சீட் ஒதுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட தொகுதி என்றில்லாமல் மாநிலம் முழுவதும் பணியாற்ற அண்ணாமலை விரும்பியதாக பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள், வேட்பாளர்களின் விருப்பம் உள்ளிட்ட பல விஷயங்கள் வேட்பாளர் தேர்வில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
News April 3, 2026
மாம்பழத்திற்கு எதிராக களமிறங்கும் G.K.மணி மகன்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்., – பாமக இடையே 3 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில், பாமகவின் பாடி செல்வத்தை எதிர்த்து காங்., சார்பில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் களமிறங்குகிறார். மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிசாமியை எதிர்த்து காங்., சின் ஜமால் யூனுஸ் முகமது, சோளிங்கரில் சரவணனை எதிர்த்து முனிரத்னம் மோத இருக்கின்றனர்.


