News March 16, 2024
BREAKING: “இரட்டை இலை” சின்னம்.. புதிய சிக்கல்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவும், படிவம் ஏ மற்றும் பி -இல் கையெழுத்திடும் அதிகாரத்தை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இது இபிஎஸ்-க்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளது.
Similar News
News September 25, 2025
மோசடியை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய திட்டம்

வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாக பெயர் நீக்கத்தை தடுக்க புதிய நடைமுறையை ECI அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி ஒருவர் பெயர் நீக்கத்திற்கு மனு அளித்தால், அதுதொடர்பாக அவர்களின் செல்போன் எண்ணுக்கு OTP செல்லுமாம். அதை பதிவிட்ட பிறகே வாக்காளரின் பெயர் நீக்கம் செய்யப்படுமாம். வெளிமாநிலத்தில் இருந்து வாக்களர் பட்டியலில் பெயர் நீக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 25, 2025
காலையில் எழுந்ததும் சிகரெட் பிடிப்பவரா நீங்கள்?

காலையில் எழுந்ததும் 30 நிமிடங்களுக்குள் சிகரெட் பிடிப்பவர்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பென்சில்வேனியா மாகாண பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கேன்சர் மற்றும் உடலில் கெட்ட கொழுப்புகள், ரத்த கொதிப்பு, இதய நோய்கள், நீரிழிவு பிரச்னைகளை ஏற்படுத்தும். இது இளைஞர்களை அதிகம் பாதிக்கலாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News September 25, 2025
‘மெய்யழகன்’ படத்தை தமிழில் எடுத்தது தவறா?

‘மெய்யழகன்’படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், படம் வெளியான சமயத்தில் பல எதிர்மறை விமர்சனங்களும் வந்தன. இந்நிலையில், ‘மெய்யழகன்’ படத்தை தமிழில் எடுத்தது தவறு என பலர் கூறியதாக இயக்குநர் பிரேம் குமார் கூறி இருக்கிறார். மெய்யழகனை மலையாளத்தில் எடுத்திருந்தால் தமிழ் ரசிகர்கள் அதை கொண்டாடி இருப்பார்கள் என தன்னிடம் சொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மெய்யழகன் படம் பிடிக்குமா?