News March 21, 2024
BREAKING: வீடு வீடாக வருகிறது..

தேர்தலில் வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டுமென வீடு வீடாக சென்று கையேடு வழங்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ல் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துகள், ஆலோசனைகளை கேட்பதற்காக மார்ச் 23ல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
Similar News
News November 7, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்திற்கான மழை விடுமுறையை ஈடுசெய்ய நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
News November 7, 2025
FLASH: விலை ஒரே அடியாக ₹8,000 அதிகரித்தது

கடந்த 2 மாதங்களாக தங்கம், வெள்ளி விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் அதன் தாக்கம் பட்டிலும் எதிரொலித்துள்ளது. குறைந்த அளவிலான ஜரிகைகள் கொண்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் இதற்கு முன்பு ₹10,000 – ₹12,000 வரை விற்கப்பட்டன. ஆனால் அதன் விலை ₹20,000 ஆக தற்போது அதிகரித்துள்ளது. தங்கம் வெள்ளியை தொடர்ந்து பட்டும் ஏழை எளிய மக்களுக்கு எட்டா கனியாக மாறியுள்ளது.
News November 7, 2025
கவுரி கிஷனுக்கு ஆதரவாக நிற்கும் சந்தோஷ் நாராயணன்

நடிகை கவுரி கிஷனிடம் யூடியூபர் ஒருவர் உங்கள் எடை என்ன என கேட்டது பெரும் சர்ச்சையானது. யூடியூபருக்கு மேடையிலேயே கவுரி கிஷன் தக்க பதிலடி கொடுத்த நிலையில், அவரது தைரியத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது கருத்து சரி என்பது போல் பத்திரிகையாளர் தொடர்ந்து பேசியது, அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


