News March 21, 2024
BREAKING: வீடு வீடாக வருகிறது..

தேர்தலில் வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டுமென வீடு வீடாக சென்று கையேடு வழங்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ல் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துகள், ஆலோசனைகளை கேட்பதற்காக மார்ச் 23ல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
Similar News
News April 18, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்

கோவையில் கல்லூரி மாணவிக்கு CEO பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவி, அதே கல்லூரியில் பணிபுரிந்து கொண்டு படித்து வந்துள்ளார். அக்கல்லூரியின் CEO-வான பிரசன்னா, செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன், கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
News April 18, 2025
குறையாத மழை.. என்ன நடக்கும்?

பெங்களூருவில் நடைபெறவிருந்த RCB, PBKS இடையேயான ஐபிஎல் போட்டி மழையால் தாமதமாகியிருக்கிறது. இன்னமும் மழை தொடர்வதால், போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர். இரவு 10.54 மணிக்கு போட்டியை தொடங்கினால் கூட 5 ஒவர் போட்டியாக இது நடைபெறும். அதனை மீறினால், போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பிரித்தளிக்கப்படும்.
News April 18, 2025
FACT CHECK: UPI-க்கு GST?

₹2000-க்கு அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு GST வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. GPay, PhonePe மூலம் ₹2000-க்கு மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் நிதியமைச்சகம், அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று கறாராக தெரிவித்துள்ளது.