News April 25, 2025
BREAKING: இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து!

இபிஎஸ்-க்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது எம்பி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். முன்னதாக, கே.சி.பழனிசாமி இபிஎஸ் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.
Similar News
News November 21, 2025
விஜய் சினிமா டயலாக்குகளை மட்டுமே பேசுகிறார்: வைகோ

அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என விஜய் பேசி வருவது ஒருபோதும் நடக்காது என வைகோ தெரிவித்தார். கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை, சென்னைக்கு அழைத்து சந்தித்தது அவரின் பொறுப்பற்ற செயல் எனவும் சாடினார். அவர் சினிமா டயலாக்குகளை மட்டுமே பேசி வருவதாகவும், CM ஸ்டாலினை Uncle என சொல்வதெல்லாம் தெனாவட்டு என்றும் விமர்சித்துள்ளார்.
News November 21, 2025
7 தங்க பதக்கத்தை வென்ற இந்திய சிங்கப் பெண்கள்

உலகக் கோப்பை குத்துச்சண்டையில் நேற்று ஒரேநாளில் 7 இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். 48 கிலோ(KG) பிரிவில் மீனாட்சி, 54KG-ல் பிரீத்தி, 70KG-ல் பிரிவில் அருந்ததி சவுத்ரி, 80KG-ல் நுபுர், 51KG-ல் ஜதுமணி, 65KG-ல் அபினாஷ் ஜம்வால். 80KG-ல் அங்குஷ் பன்ஹால் ஆகியோர் தங்கத்தை முத்தமிட்டனர். மற்றொரு இந்தியா வீராங்கனை ஹிதேஷ், கஜகஸ்தான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
News November 21, 2025
மெட்ரோ திட்டத்தில் பாஜகவுக்கு உள்நோக்கம்: செந்தில் பாலாஜி

மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக கூறி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி, மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். திட்ட அறிக்கையில் சந்தேகம் இருந்தால், அதைத் தெளிவுபடுத்த 15 மாதங்கள் அவகாசம் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார். மேலும் TN-க்கு BJP அரசு இதுவரை ஏதாவது சிறப்புத் திட்டம் கொண்டு வந்துள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.


