News April 25, 2025

BREAKING: இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து!

image

இபிஎஸ்-க்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது எம்பி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். முன்னதாக, கே.சி.பழனிசாமி இபிஎஸ் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.

Similar News

News November 25, 2025

சுபமுகூர்த்தம்.. பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

image

கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினமான நவ.27-ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படவுள்ளது. மேலும் அதிகளவு ஆவணப் பதிவுகள் நடக்கும் அலுவலகங்களில் 150 டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 25, 2025

தவெகவில் செங்கோட்டையன்? நீடிக்கும் சஸ்பென்ஸ்!

image

<<18380211>>Ex அமைச்சர் செங்கோட்டையன்<<>> தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் செய்திதான் TN அரசியலில் 2 நாள்களாக பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்க WAY2NEWS, செங்கோட்டையன் தரப்பினரை தொடர்பு கொண்டபோது அவர்கள் இந்த தகவலை மறுக்கவில்லை. பின்னர் பேசுகிறோம் என்றனர். செய்தியாளர்களிடம் பேசிய CTR நிர்மல்குமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, அவரும், இது பற்றி பின்னர் பேசுகிறோம் என சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

News November 25, 2025

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் ரூல்ஸ் மாறியது

image

நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலில் உள்ளது. இதனை TN முழுவதும் நவ.30-க்குள் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, திருச்சியில் இன்றுமுதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பிற மாவட்டங்களிலும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்மூலம், விற்பனை விலையுடன் கூடுதலாக ₹10 கொடுத்து மது வாங்க வேண்டும். காலி பாட்டிலை ஒப்படைத்து அதனை பெற்றுக் கொள்ளலாம்.

error: Content is protected !!