News September 27, 2025
BREAKING: கரூரில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் சடலங்களை பார்த்து உறவினர்கள் கதறி துடிக்கும் காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைக்கிறது.
ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து ஹாஸ்பிடலை நோக்கி வந்து கொண்டிருப்பதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.
Similar News
News January 8, 2026
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: புதிய தமிழகம்

மதுரையில் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் திராவிட மாயை ஆட்சிக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொள்ள வேண்டும், காசுக்கு ஓட்டு போடும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தலா 2.5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் அடக்கம்.
News January 8, 2026
கைக்குழந்தையுடன் பாக்யராஜ் படங்களை பார்த்தேன்: CM

திரை உலகில் பாக்யராஜ் 50 ஆண்டு நிறைவு செய்ததையொட்டி நடந்த விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, கதைக்காக பாக்யராஜா, பாக்யராஜுக்காக கதையா என்று சொல்லும் அளவுக்கு வெற்றிப் படங்களை கொடுத்தவர் என அவர் புகழாரம் சூட்டினார். வெற்றி நாயகனாக அவர் வலம் வந்ததாகவும், கைக்குழந்தையாக உதயநிதியை தூக்கிக்கொண்டு சென்று அவரது படங்களை பார்த்ததாகவும் ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.
News January 8, 2026
வரலாற்றில் இன்று

*1642 – வானியலாளர் கலிலியோ கலிலி மறைந்தார்
*1828 – அமெரிக்காவில் ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டது.
*1942 – இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்ததினம்
*1973 – ரஷ்யாவின் லூனா 21 விண்கலம் விண்ணில் பாய்ந்தது
*1986 – கன்னட நடிகர் யஷ் பிறந்ததினம்
*2003 – துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியதில் 70 பேர் பலியாகினர்.


