News October 8, 2025
தமிழகத்தை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தஷ்வந்தின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. குற்றத்தை உறுதிசெய்ய போலீஸ் போதுமான ஆவணங்களை தாக்கல் செய்ய தவறிவிட்டதாக கூறி, தூக்கு தண்டனையை ரத்து செய்ததோடு, தஷ்வந்தை விடுதலையும் செய்துள்ளது. 2017-ம் ஆண்டு சென்னையில் தனது வீட்டிற்கு அருகே வசித்த 6 வயது சிறுமியை, தஷ்வந்த் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
Similar News
News October 8, 2025
சீமான் மீதான வழக்கை திரும்பப்பெற தயார்: நடிகை

நடிகை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான். இதனால் தனது கண்ணியம் மீட்டெடுக்கப்படும் என நடிகை (விஜயலட்சுமி) தெரிவித்துள்ளார். அதோடு, சீமானால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்பதால் அவர் இழப்பீடு வழங்க SC உத்தரவிட வேண்டும் என நடிகை கோரிக்கை வைத்துள்ளார். மேலும், SC-யின் அறிவுறுத்தலின்படி சீமான் மீதான வழக்கை திரும்பப்பெற தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
News October 8, 2025
வதந்திகளுக்கு பதிலளித்த ரஷ்மிகா!

திரைக்கு பின்னால் நடப்பது உலகுக்கு தெரியாது என நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கன்னட திரைப்படங்களில் நடிக்க ரஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து பதிலளித்த அவர், மற்றவர்கள் என்ன நினைத்தாலும் கவலையில்லை என்றார். மேலும், தனது நடிப்பு குறித்து பிறர் என்ன பேசுகிறார்கள் என்பதை மட்டுமே தான் கவனிப்பதாகவும் ரஷ்மிகா கூறினார்.
News October 8, 2025
உருக்கமாக மன்னிப்பு கேட்டார் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தாரிடம் விஜய் பேசியபோது, தனது மன்னிப்பை தெரிவித்துள்ளார். தம்பியை பறிகொடுத்த பெண் ஒருவர் அளித்த பேட்டியில், உங்கள் இழப்பு தாங்க முடியாத இழப்பு, என்னை (விஜய்) தம்பியாக நினைத்து கொள்ளுங்கள். என்மீது தப்புதான்; என்னை மன்னிச்சிடுங்க. வரமுடியாத சூழலில் போயிட்டேன். கோர்ட் ஆர்டர் வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன் என விஜய் உருக்கமாக பேசியதாக தெரிவித்துள்ளார்.