News April 21, 2025

BREAKING: காங். MLA-வுக்கு 3 மாதம் சிறை

image

காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவரும், கிள்ளியூர் காங். MLAவுமான ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு புறம்போக்கு நிலங்களை மீட்கச் சென்ற அரசு அதிகாரிகளை தாக்கியதாக அவர் உள்பட 3 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தற்போது மூவருக்கும் சிறை தண்டனையுடன் ₹100 அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News January 11, 2026

‘ஜனநாயகன்’ to ‘டாக்ஸிக்’ வரை.. யார் இந்த KVN?

image

‘ஜனநாயகன்’, ‘டாக்ஸிக்’, மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படம் என பல முக்கிய பிரமாண்ட படங்களை KVN நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் நிறுவனர் பெங்களூருவை சேர்ந்த வெங்கட் கே.நாராயணன், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். ஆரம்பத்தில் கர்நாடகாவில் திரைப்பட விநியோகஸ்தராக தொடங்கிய இவரது பயணம் பிரமாண்ட படங்களை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

News January 11, 2026

திமுக அரசை அப்புறப்படுத்த சபதம் எடுப்போம்: நிதின் நபின்

image

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் கலந்து கொண்டார். அப்போது லஞ்ச, லாவண்யம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே மத்திய அரசின் கனவு என அவர் தெரிவித்தார். அதனால் திமுக அரசை இந்த மண்ணை விட்டு அகற்ற வேண்டும், இங்குள்ள அமைச்சர்கள், ஆன்மிகத்தை கொச்சைப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக அரசை அப்புறப்படுத்த அனைவரும் சபதம் எடுப்போம் என்றும் அழைப்பு விடுத்தார்.

News January 11, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 577 ▶குறள்: கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.. ▶பொருள்:கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

error: Content is protected !!