News February 25, 2025
BREAKING: காங்கிரஸ் EX எம்.பி.க்கு ஆயுள் தண்டனை

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் EX எம்.பி. சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு டெல்லியில் 1984இல் கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சஜ்ஜன்குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
Similar News
News February 25, 2025
தற்காலிக பணியாளர்களை நீக்க உத்தரவு

2020க்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறையின் மேல்முறையீட்டு வழக்கில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மார்ச் 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
News February 25, 2025
நீங்கள் சிகரெட் பிடிப்பவரா?

புகை பிடிப்பதால் கேன்சர் வரும் என சிகரெட் பெட்டிகளில் போட்டிருந்தாலும், நமது மக்கள் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். இருப்பினும் புகை பிடிப்பது எலும்புகளையும் பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எளிமையாக உடையும் அளவிற்கு எலும்பின் வலிமையை புகைப்பழக்கம் குறைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், எலும்பு உருவாவதற்கு காரணமான ஹார்மோன்களையும் அது சிதைப்பதாகவும் கூறுகின்றனர்.
News February 25, 2025
AUS-SA போட்டி 20 ஓவர்களாக குறைப்பு?

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறவுள்ள ராவல்பிண்டி மைதானம் அமைந்திருக்கும் பகுதியில், தொடர்ச்சியாக மழை பெய்வதால் இதுவரை டாஸ் போடப்படவில்லை. இரவு 7.20க்குள் மழை நிற்கும் பட்சத்தில், ஆட்டத்தை 20 ஓவர்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்.