News December 30, 2024
BREAKING: கண்ணாடி பாலத்தை CM திறந்து வைத்தார்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். வள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ₹37 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்ணாடி பாலத்தின் வழியாக முதல்வர் விவேகானந்தர் பாறைக்குச் சென்றார்.
Similar News
News March 10, 2026
மனைவிக்கு உருக்கத்துடன் நன்றி சொன்ன சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமான சஞ்சு சாம்சன் தன் மனைவி சாருலதாவுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். என் வாழ்க்கையில் கிரிக்கெட் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டு, அதை உங்களுக்கானதாகவும் மாற்றியதற்கு நன்றி என கூறியுள்ளார். என் வாழ்க்கையின் சிறந்த பக்கத்தை விட மோசமான பக்கத்திலும் இன்னும் ஆதரவாக நின்றீர்கள்; மிக்க நன்றி, என் அன்பான பொண்டாட்டி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 10, 2026
விஜய் கூட்டணி வைத்தால் 100% வெற்றி உறுதி: ஜெகன் மூர்த்தி

விஜய்யின் தவெக NDA கூட்டணிக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்போம் என பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், விஜய் NDA கூட்டணிக்கு வருவது உண்மையா என தெரியவில்லை. இதுவரை வதந்தியாகவே உள்ளது என்றார். ஒருவேளை விஜய் கூட்டணி வைத்தால் 100% வெற்றி உறுதி எனவும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் NDA கூட்டணி தான் வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளார்.
News March 10, 2026
அந்த மனுஷன் கூட நடிக்க முடியாது.. சோனா ஓபன் டாக்!

‘ஆளவிடுங்கடா சாமி, அந்த மனுஷன் கூட நடிக்க முடியாது’ என வடிவேலுவுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகை சோனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ‘குசேலன்’ படத்திற்கு பிறகு வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகள் வந்த நிலையில், அவரை தன்னால் ஹேண்டில் செய்ய முடியாது என்பதால் நடிக்க மறுத்ததாக தெரிவித்தார். இதற்கு மேல் எதுவும் பேச முடியாது என குறிப்பிட்ட அவர், சுயமரியாதை முக்கியம் எனவும் கூறியுள்ளார்.


