News September 15, 2025
BREAKING: 10, 12-ம் வகுப்பு தேர்வில் மாற்றம்

பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு CBSE பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனி 75% வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும். மாதாந்திர தேர்வு, செயல்முறை தேர்வு, வருகைப் பதிவு ஆகியவை உள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பள்ளியின் உள் மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் தேர்வு முடிவுகள் வெளியாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News September 15, 2025
BREAKING: முடிவை மாற்றினார் இபிஎஸ்

செங்கோட்டையன் விவகாரத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை EPS ஆலோசிக்கவுள்ளதாக செய்தி பரவியது. இதனால், அவர் தனது தேர்தல் பரப்புரை பயணத்தை மாற்றியமைக்க முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமித்ஷாவை சந்திக்கும் பிளான் இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானமே முக்கியம் என்றும், மழை காரணமாகவே பரப்புரை பயணம் ஒத்திவைக்கப் பட்டதாகவும் EPS விளக்கம் அளித்துள்ளார்.
News September 15, 2025
Parenting: காய்ச்சலின் போது குழந்தைகள் குளிக்கலாமா?

குழந்தைகளுக்கு ஜுரம் ஏற்படும்போது குளிக்கலாமா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு இருக்கிறது. காய்ச்சலின் போது, உடல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இதனால் உடல் சூட்டை தணிக்கவும், உடலில் சேரும் பாக்டீரியாக்களை நீக்கவும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். ஒருவேளை குளிக்கமுடியாத பட்சத்தில், குழந்தைகளில் உடலை வெதுவெதுப்பான நீரில் துடைப்பது நல்லது. SHARE.
News September 15, 2025
AI மூலம் 8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு

Nano Banana என்று பொதுமக்கள் வரை பலரும் இன்று AI பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில், ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கில், 8%-க்கும் மேலான பொருளாதார வளர்ச்சியை AI உருவாக்கும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை கூறியுள்ளது. குறிப்பாக, நிதி மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் AI அதிகளவு பயன்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் AI கருவி எது?