News March 29, 2024

BREAKING: அதிமுக அறிவிப்பு

image

தேர்தல் பணிகளுக்கான கூடுதல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சிங்காரம் – தருமபுரி, மாதவரம் மூர்த்தி – சென்னை வடக்கு, நாஞ்சில் வின்செண்ட் – கன்னியாகுமரி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் – காஞ்சிபுரம், அய்யாத்துரை பாண்டியன் – தென்காசி ஆகியோர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 23, 2025

10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிச.1-ம் தேதி முதல் டிச.19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக அணுசக்தி மசோதா 2025 தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தவிர உயர்கல்வி கமிஷன் மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, கார்பரேட் சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்டவையும் பட்டியலிடப்பட்டு உள்ளது.

News November 23, 2025

உரிமைகளை தாரைவார்க்க தயாரான திமுக: அன்புமணி

image

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது கவலையளிக்கிறதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் திமுக அரசு வழக்கம் போலவே அமைதி காத்து, உரிமைகளை தாரை வார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறதாகவும் சாடினார்.
காவிரி பாசன விவசாயிகளின் அச்சத்தை திமுக அரசு உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

News November 23, 2025

வரலாற்றில் இன்று

image

*1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
*1956 – அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர்.
*1980 – இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4,800 பேர் உயிரிழந்தனர்.
*2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

error: Content is protected !!