News September 29, 2025

BREAKING:மௌனம் கலைத்தார் ஆதவ் அர்ஜுனா

image

மரணத்தின் வலியையும், கரூர் மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மரணத்தின் வலியை 5 வயது சிறுவனாக தனது தாயின் தற்கொலையை பார்த்தபோதே உணர்ந்ததாக தெரிவித்த அவர், அந்த வலியை தற்போது மீண்டும் இந்த மரணங்கள் ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தின் நம்பிக்கையை சுமக்கும் உறவாக தனது பயணம் இருக்கும் என கூறியுள்ளார்.

Similar News

News September 29, 2025

BREAKING: அவசரமாக கிளம்பினார் விஜய்

image

விஜய் தனது காரில் பாதுகாப்பு குழுவினருடன் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த அன்று இரவு தனது வீட்டிற்குள் சென்ற விஜய், சுமார் 34 மணி நேரத்திற்கு பிறகு இன்று வெளியே வந்துள்ளார். அவர் எதற்காக வெளியே சென்றார் என்ற தகவல் தெரியவில்லை. இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க விஜய் கரூர் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.

News September 29, 2025

ராகுல் காந்தியிடம் எமோஷனலாக பேசிய விஜய்

image

விஜய்யுடன் ராகுல் காந்தி 15 நிமிடங்கள் போனில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்த ராகுல், அங்கு நடந்தவை பற்றியும், விஜய்யின் மனநிலை குறித்தும் கேட்டறிந்தார். ராகுலிடம் விஜய் எமோஷனலாக பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனெவே விஜய்க்கும் ராகுலுக்கும் நல்லுறவு இருப்பதாக கூறப்படும் நிலையில், அரசியல் களத்தில் இந்த Call பேசுபொருளாக மாறியுள்ளது.

News September 29, 2025

Sports Roundup: வெள்ளி வென்ற ஸ்ரீஹரி நட்ராஜ்

image

*ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில், ஆடவர் 200மீ ப்ரீஸ்டைல், 50மீ பேக் ஸ்ட்ரோக்கில் ஸ்ரீஹரி நட்ராஜ் வெள்ளி பதக்கம் வென்றார். *கத்தார் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியாவின் அபய் சிங் EX உலக சாம்பியன் கரீம் கவாத்தை வீழ்த்தி அசத்தல். *புரோ கபடி லீக்கில் இன்று ஹரியானா ஸ்டீலர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதல். *ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 50 மீ ரைபிள் 3 பிரிவில், அனுஷ்கா தோக்கூர் தங்கம் வென்றார்.

error: Content is protected !!