News November 29, 2024
BREAKING: உருவானது புயல்

வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இது மாமல்லபுரம் – காரைக்கால் இடையே நாளை பிற்பகல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஃபெஞ்சல் என மாற்றப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
புதிய சட்ட மசோதா நிறைவேற வாய்ப்புள்ளதா?

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலான <<17459383>>புதிய சட்ட மசோதா<<>>, ஒரு அரசியலைப்பு சட்டத்திருத்தம் ஆகும். ஆகவே, இதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை (லோக் சபாவில் 362 எம்பிக்கள்) தேவை. NDA-வுக்கு 293 எம்பிக்கள் உள்ளனர். ராஜ்ய சபாவில் 164 எம்பிக்கள் தேவையென்ற நிலையில் NDA-வுக்கு 125 பேர் தான் உள்ளனர். இருந்தும் இந்த மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளது. பாஜகவின் திட்டம் என்ன? எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்?
News August 20, 2025
BREAKING: வீட்டுக்கடன்… நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

வீட்டுக்கடன் வழங்கும் நிதிநிறுவனங்கள், கடன் மதிப்பு விதிமுறைகளை மீறுவதால், கடன்களை கண்காணிக்க NHB(National Housing Bank) திட்டமிட்டுள்ளது. கஸ்டமர்களின் செக்யூரிட்டி ஆவணங்களில் LTV(Loan-to-Value) 75% இருக்கலாம் என்ற விதியை மீறி, சில வங்கிகள் 95% கடன் வழங்குவது தெரியவந்துள்ளது. NHB கண்காணிப்பின் வளையத்திற்குள் இந்நிறுவனங்கள் வந்துள்ளதால், புதிதாக வீட்டுக்கடன் பெறுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
News August 20, 2025
30 நாள் கெடு விதிக்கும் சட்டம்: யாருக்கு குறி?

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ‘<<17462799>>PM, CM பதவிபறிப்பு மசோதா<<>>’வை எதிர்க்கட்சிகள் முற்றாக எதிர்க்கின்றன. பிரதமரோ, முதல்வரோ அல்லது அமைச்சரோ – தொடர்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தாலே, அவர் பதவியிழப்பார் என்று இந்த மசோதா சொல்வதே காரணம். தேர்தலில் வீழ்த்த முடியாத மாநில அரசியல் தலைவர்களை, வழக்குகள் மூலம் சிறையில் தள்ளி வீழ்த்தும் மறைமுக வியூகமே இது என்கின்றனர் எதிர்கட்சிகள். உங்கள் கருத்து?