News April 4, 2024
BREAKING : ரயில் மோதி 4 பேர் மரணம்

சென்னை, பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டடத்தில் பெயிண்டிங் பணி செய்து வந்தனர். பெயிண்டிங் வேலை முடிந்ததை அடுத்து 4 பேரும், சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில், ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
Similar News
News April 20, 2025
ஐபிஎல் ரசிகர்களுக்கு இன்று ‘டபுள் டமாக்கா’..!

ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும், 5-வது இடத்தில் உள்ள பெங்களூரு அணியும் பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன. இரு அணிகளும் பலமாக இருப்பதால் போட்டியில் அனல் பறக்கும். மற்றொரு போட்டியில், ஐபிஎல் தொடரின் எல்- கிளாசிக்கோ எனப்படும் சென்னை – மும்பை அணிகள் இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்னைக்கு டபுள் ட்ரீட் தான்!
News April 20, 2025
‘மண்டாடி’யாக மாஸ் காட்டும் சூரி..!

நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்திற்கு மண்டாடி என பெயரிடப்பட்டு மிரட்டலான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்த படத்தில் சூரி மீனவராக நடிக்க உள்ளாராம். மண்டாடி என்றால் நீரின் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தியை அறிந்தவர் என சொல்லப்படுகிறது. முத்துகாளி என்ற கதாபாத்திரத்தில் சூரி நடிக்கும் இந்த படத்தில், மகிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
News April 20, 2025
பாஜக வேண்டாம்… தவெக போடும் கூட்டணி கணக்கு!

அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை எனவும் தவெகவின் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டிசம்பரில் கூட்டணி கட்சிகள் யார்? என்பது குறித்து தெரிவிப்போம் எனவும் தேர்தலில் திமுகவின் வாக்குகளை கைப்பற்றுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், பாஜக இல்லாத புதிய கூட்டணியை உருவாக்க தவெக திட்டமிடுவதாக கூறப்படுகிறது.