News March 16, 2024
BREAKING: ” தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்”

தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் 2021இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால், அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 26, 2025
இறந்த தாய்.. 4 நாள் ஃபிரிட்ஜில் வைக்க சொன்ன மகன்!

உ.பி.யில் முதியோர் இல்லத்தில் இருந்த ஷோபாதேவி இறந்துவிட்டதாக மகனிடம் போனில் கூறப்படுகிறது. ‘வீட்டுல கல்யாணம் நடக்குது.. 4 நாள் ஃபிரிட்ஜில் வைங்க’ என அந்த மகன் கூறி இருக்கிறார். பின்னர் உறவினர்களின் ஏற்பாட்டில், ஷோபா எரிக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறில், வாழும் காலத்திலும் முதியோர் இல்லத்தில் தவிக்கவிட்டு தண்டித்த மகன், இறந்த பிறகும் அத்தாயை மனவேதனையில் ஆழ்த்தியுள்ளார்.
News November 26, 2025
BREAKING: 15 இடங்களில் ED அதிரடி ரெய்டு

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ₹2,438 கோடி அளவிலான ஆருத்ரா கோல்ட் மோசடி தொடர்பாக ஏற்கெனவே பொருளாதார குற்றப்பிரிவு(Economic Offences Wing) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வழக்கு தொடர்பாகவே இன்று இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
News November 26, 2025
ATM-ல் பணம் வரலையா? பேங்க் உங்களுக்கு fine கட்டும்!

ATM மெஷினில் பணம் வராமல், அக்கவுண்ட்டில் இருந்து பணம் Debit ஆனதாக மெசேஜ் வந்துவிட்டதா? டென்ஷன் ஆக வேண்டாம். இதுகுறித்து உங்கள் வங்கிக்கு சென்று புகாரளியுங்கள். ஒருவேளை அந்த புகாரின்மீது பேங்க் நடவடிக்கை எடுக்க 7 நாள்களுக்கு மேல் ஆனால், நாள் ஒன்றுக்கு 100 ரூபாயை உங்களுக்கு அபராதமாக செலுத்தவேண்டும். பேங்க் இந்த அபராத தொகையை செலுத்த மறுக்கும் பட்சத்தில் RBI-ல் நீங்கள் புகாரளிக்கலாம். SHARE.


