News March 16, 2024
BREAKING: ” தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்”

தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் 2021இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால், அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 526
▶குறள்:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
▶பொருள்: பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.
News November 21, 2025
காஷ்மீர் டைம்ஸில் சோதனை: வெடி பொருள்கள் பறிமுதல்

தேச விரோத செயல்களை ஊக்குவிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஜம்முவில் உள்ள ‘காஷ்மீர் டைம்ஸ்’ அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. மாநில புலனாய்வு பிரிவின் சோதனையில் Ak-47 தோட்டாக்கள், பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் மூன்று grenade levers உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் குறித்து தீவிர விசாரணையும் நடத்தப்படுகிறது. ‘காஷ்மீர் டைம்ஸ்’ நாளிதழ் 1954-ல் இருந்து செயல்பாடுகிறது.
News November 21, 2025
உயிர்களுக்கு ஆபத்தாகவும் SIR பணிகள்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் நடந்து வரும் SIR பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு அம்மாநில CM மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். போதுமான திட்டமிடல் இல்லாததால் அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் SIR சுமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் BLO தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டிய அவர், உயிர்களுக்கு இந்த பணி அச்சுறுத்தலாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


