News August 6, 2025
BREAKING: தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்குவந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அனைவரையும் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 7, 2025
யூட்யூப் காட்டி சோறு ஊட்டும் பெற்றோரா?

யூடியூப் காட்டித்தான் இன்று குழந்தைகளை வளர்க்கவே செய்கிறோம். துள்ளல் பாடல்கள், கார்ட்டூன் என வீட்டில் மட்டுமல்லாது, பொது இடங்களிலும் குழந்தைகளிடம் செல்போனை கொடுத்துவிடுகிறோம். இதனால் சிறுவயதிலேயே கண் பிரச்னைகள், தூக்கமின்மை, மன உளைச்சல் வரை ஏற்படுகின்றன. இப்படி பழக்கினால் குழந்தைகளை போனிடமிருந்து மீட்கவே முடியாது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் எப்படி?
News August 7, 2025
இந்திரா காந்தியை ஃபாலோ பண்ணுங்க: மோடிக்கு அட்வைஸ்

இந்தியா மீது அமெரிக்கா இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்தியுள்ளதற்கு, மோடியை காங்., தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். 2019 ‘ஹவ்டி மோடி’ முதல் பாக்., போர்நிறுத்தம் வரை டிரம்ப்புக்கு மோடி ஆதரவளித்தார். ஆனால், வரிவிதிப்பின் மூலம் மோடியின் தோல்வி வெளிப்பட்டுள்ளது என்ற அவர், மோடி தன் ஈகோவை ஒதுக்கிவிட்டு, இந்திரா காந்தியை முன்மாதிரியாக கொண்டு நம் வெளிநாட்டுக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றார்.
News August 7, 2025
டாப்பர் குழந்தைகளும் நட்பு ஏக்கமும்!

பள்ளிகளில் டாப்பர் பிள்ளைகள் பலரும் நல்ல நண்பர்களுக்காக ஏங்குவார்கள் எனத் தெரியுமா? அவர்களுக்கு நண்பர்கள் இருந்தாலும் அது படிப்பையும் மதிப்பெண்களையும் சுற்றி மட்டுமே இருக்கும். இந்த சூழலில் பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கான நட்பையும் வெளியில் நட்பு கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். இந்தப் பிள்ளைகள் தனிமையில் வீழ்ந்துவிடாமலும் பெற்றோர் உதவ வேண்டும்.