News April 8, 2025
BREAKING: ஒரு குவிண்டால் நெல் ₹2,500: அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ₹2500 வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், இந்த புதிய உத்தரவு வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் எனக் கூறினார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News November 3, 2025
EPS சிறை செல்ல திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆசை: TTV

கோடநாடு வழக்கில் EPS-ஐ கைது செய்ய திண்டுக்கல் சீனிவாசன் விரும்புவதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கில் EPS தான் A1 என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், உண்மையாகவே குற்றத்தை நிரூப்பித்துவிட்டு EPS-யை கைது செய்யுங்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். இந்நிலையில், EPS உடன் இருப்பவர்கள் மனவருத்தத்தில் இருப்பதாகவும், EPS-ன் வீழ்ச்சிக்காக காத்திருப்பதாகவும் TTV கூறியுள்ளார்.
News November 3, 2025
இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

உலகெங்கிலும் நாம் அறியாத எத்தனையோ விசித்திரங்களும், வியப்புகளும் நிறைந்திருக்கின்றன. நிலப்பரப்பு, கலாச்சாரம், வரலாறு, சட்டங்கள் என நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் உள்ளன. அப்படி, உலகின் பல இடங்களில் காணப்படும், நாம் நம்ப முடியாத சில சுவாரஸ்ய தகவல்களை அறிய மேலே SWIPE பண்ணுங்க…
News November 3, 2025
செங்கோட்டையனை நீக்கியது வேதனை: கார்த்தி சிதம்பரம்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது வருத்தமளிப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே அதிமுக என்ற மாபெரும் கட்சி கீழ்நோக்கி செல்கிறது என்று விமர்சித்த அவர், மூத்த அரசியல் தலைவர், பல ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்தவரை நீக்கியது வேதனை அளிக்கிறது என்றார். மேலும், இது உள்கட்சி விவகாரம் என்பதால், இதற்கு மேல் பேச முடியாது எனவும் குறிப்பிட்டார்.


