News October 24, 2025

அனைவருக்கும் ₹1,000 உரிமைத் தொகை.. வந்தது அப்டேட்

image

வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, அனைத்து மகளிருக்கும் ₹1,000 உரிமைத் தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், தகுதியுள்ள மகளிருக்கு டிச.15-ம் தேதி முதல் பணம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போதைய நடவடிக்கையால் லட்சக்கணக்கான மகளிர் பயனடைய உள்ளனர். SHARE IT.

Similar News

News October 25, 2025

CM வேட்பாளர் நிதிஷ்குமார்: அறிவித்தார் மோடி

image

பிஹார் சட்டசபை தேர்தலில் INDIA கூட்டணி தேஜஸ்வி யாதவை CM வேட்பாளராக அறிவித்தது. தொடர்ந்து, NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார் PM மோடி. நேற்று பிஹாரில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நிதிஷ்குமார் தலைமையில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார்.

News October 25, 2025

அரையாண்டு விடுமுறை.. தற்போது வெளியான அப்டேட்

image

அரையாண்டு, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிச.15 முதல் 23 வரை நடைபெறுகிறது. டிச.24 – ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை வருகிறது. அதேபோல், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிச.25-ம் தேதி விடுமுறையாகும். இதனால், விடுமுறைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

News October 25, 2025

ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி வழங்குக

image

பள்ளி ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக CM ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால், இதுகுறித்து ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வார் என்றும் விரைவில் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!