News September 27, 2025
BREAKING: ₹1000 அபராதம் … வந்தது அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளை கண்காணிக்க தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால், ₹1000 வரை அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே எச்சரித்துள்ளது. இதற்கு 50 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Similar News
News January 8, 2026
தொடர் சரிவில் சந்தைகள்.. டிரம்ப் மிரட்டல் காரணமா?

பங்குச்சந்தைகளின் தொடர் சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த 4 நாள்களாகவே மீளாத சென்செக்ஸ் இன்று(ஜன.8) வர்த்தக நேர முடிவில் 780 புள்ளிகளை இழந்து 84,180 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், நிஃப்டி 263 புள்ளிகளை சரிந்து 25,876 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இந்தியா மீது <<18795308>>டிரம்ப் 500% வரி விதிக்க முடிவு<<>> செய்துள்ளதால் அந்நிய முதலீட்டாளர்கள் பலர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.
News January 8, 2026
JUSTIN : தமிழ் நடிகர் அதிரடி கைது

பண மோசடி வழக்கில் நடிகர் அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டுள்ளார். Ex MLA ஒருவரிடம் ₹3.5 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் அஜய் வாண்டையாரை கைது செய்த போலீசார், சென்னை அழைத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, இதுபோன்ற வழக்கில் சிக்கியதால், இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 8, 2026
நேரு சிறை செல்வதை இனி தடுக்க முடியாது: அருண்ராஜ்

₹1,020 கோடி ஊழல் விவகாரத்தில் அமைச்சர் நேரு சிறைக்கு செல்வதை இனி யாராலும் தடுக்க முடியாது என TVK-வின் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இத்தனை நாள்களாக இதை மூடி மறைக்கப் பார்த்தீர்கள்; ஆனால் இனி நடமாட முடியாது என்ற நிலை வந்தவுடன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளீர்கள் என்று சாடிய அவர், அமலாக்கத்துறையே நேரடியாகத் தூக்கி உள்ளே வைத்துவிடும் என்ற பயத்தினால் இந்த விசாரணை உத்தரவா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


