News August 28, 2025

BREAKING: வேலூரில் 5-வயது குழந்தை உயிரிழப்பு

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மரம் வெட்டும் போது மின்கம்பம் கீழே விழுந்ததில் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னை மரம் சாய்ந்ததில் மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து குழந்தை நவ்யா(5) உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 28, 2025

வேலூர்: உதவியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

image

வேலூர் மாவட்டத்தை சார்ந்த படித்த இளைஞர்கள் தமிழ்நாடு – மாநில ஆள் சேர்ப்பு நிலையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தலைமை கூட்டுறவுச் சங்கங்களில் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் அதிக அளவில் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஆக.28) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 28, 2025

வேலூர்: பெண் குழந்தை இருக்கா?

image

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ▶️ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. ▶️2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. ▶️இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ▶️இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க (<<17541513>>தொடர்ச்சி) <<>>

News August 28, 2025

பெண் குழந்தை இருக்கா? (2/2)

image

இத்திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் 1 பெண் குழந்தை (அ) 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)

error: Content is protected !!