News January 24, 2026
BREAKING: வேலூரில் இருவர் துடிதுடித்து பலி!

பேர்ணாம்பட்டு பக்காலப்பல்லி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து பணியில் இருந்த ஷேக் அலி (58), ஜமால் பாஷா (41) இருவரும் மயங்கி விழ்ந்துள்ளனர். இதையடுத்து அவர்களை மீட்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
வேலூர் வருகிறார் விஜய்!

வேலூர் அருகே உள்ள அகரம்சேரியில் வரும் பிப்.23ஆம் தேதி த.வெ.க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற காவல்துறை சார்பில் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அகரம்சேரியில் 25 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு த.வெ.க பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க.
News February 8, 2026
வேலூர்: தலையோடு பொருத்தி சோதனை; காத்திருந்த அதிர்ச்சி!

பேரணாம்பட்டு, சாத்கர் மலையில் 2 மாதங்களுக்கு முன்பு 3 காட்டுயானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதில் 1 யானையின் தந்தங்கள் உருவப்பட்டு இருந்ததை அடுத்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ஆந்திரா அருகே சித்தூரில் மறைத்து வைக்கப்பட்ட 2 யானை தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றினர். இதில் சந்திரபாபு (47) பி.சந்திரபாபு (42) ஆகியாரை கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
News February 8, 2026
வேலூரில் துணிகர சம்பவம்!

வேலூர் அடுத்த பள்ள இடையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமணி (47). இவர் இவர் நேற்று (பிப்.7) ஒசூரில் படிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றார். அப்போது வேலூர் பெண்கள் சிறை அருகே வந்தபோது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் திடீரென ரமணியின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


