News January 24, 2026
BREAKING: வேலூரில் இருவர் துடிதுடித்து பலி!

பேர்ணாம்பட்டு பக்காலப்பல்லி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து பணியில் இருந்த ஷேக் அலி (58), ஜமால் பாஷா (41) இருவரும் மயங்கி விழ்ந்துள்ளனர். இதையடுத்து அவர்களை மீட்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
வேலூரில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

வேலூர் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு <
News February 10, 2026
வேலூரில் 8 கிராம் தங்கம் இலவசம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். உடனே ஷேர் பண்ணுங்க
News February 10, 2026
வேலூரில் பிளஸ்-2 செய்முறை தேர்வு

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்- 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று (பிப்.9) தொடங்கியது. மேலும் தேர்வுகள் வருகிற 14-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தேர்வுகள் முடிந்ததும் மாணவ-மாணவிகளின் மதிப்பெண் விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


