News October 21, 2025
BREAKING: விழுப்புரம் மாவட்டத்திற்கு RED ALERT!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) விழுப்புரம் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். உடனே மத்தவங்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 24, 2026
விழுப்புரத்தில் அதிரடி கைது!

செஞ்சி சந்தைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவர் நேற்று முன்தினம் செஞ்சி காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த ஏட்டு ஸ்ரீதரிடம் தனது வங்கி கணக்கை வங்கி நிர்வாகம் முடக்கி விட்டதாக கூறினார். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீதரை கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். அதனால் ஸ்ரீதர் உயர்அதிகாரியிடம் தெரிவிக்க செஞ்சி போலீசார் சிவகுமாரை கைது செய்தனர்.
News January 24, 2026
விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டமைப்பில் வரும் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இதில் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 24, 2026
விழுப்புரம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்


