News January 6, 2026
BREAKING விருதுநகரில் வசூலில் ஈடுபட்ட காவலர் மாற்றம்

விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் ராமச்சந்திரன். இவர் உயர் அதிகாரிகளான இன்ஸ்பெக்ட,ர் எஸ்ஐ ஆகியோரின் உத்தரவுகளை மதிப்பதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ராமச்சந்திரன் வாகனத்தில் பட்டாசுக்கான திரிகளை கடத்திச் செல்பவர்களிடம் பணம் வசூலில் ஈடுபட்டதாக புகார் வந்தது. இது குறித்த விசாரணையில் எஸ்பி கண்ணன் ராமச்சந்திரனை ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
Similar News
News February 3, 2026
ஸ்ரீவி: புலிகள் சரணாலய பகுதியில் காட்டுத்தீ – பரபரப்பு

வத்ராப் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் சாம்பல்நிற அணிகள் சரணாலயம், மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது. நேற்று இரவில் இங்குள்ள தூங்கன் கடவு பீட் வெள்ளைப்பாறை சரகத்திற்குட்பட்ட பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. இதையடுத்து காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வனச்சரகர் ரவீந்திரன் மேற்பார்வையில் 5 பேர் கொண்ட குழுவினர் வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News February 3, 2026
ஸ்ரீவி: புலிகள் சரணாலய பகுதியில் காட்டுத்தீ – பரபரப்பு

வத்ராப் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் சாம்பல்நிற அணிகள் சரணாலயம், மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது. நேற்று இரவில் இங்குள்ள தூங்கன் கடவு பீட் வெள்ளைப்பாறை சரகத்திற்குட்பட்ட பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. இதையடுத்து காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வனச்சரகர் ரவீந்திரன் மேற்பார்வையில் 5 பேர் கொண்ட குழுவினர் வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News February 3, 2026
விருதுநகர்: கையும் களவுமாக சிக்கிய பலே திருடன்

வத்திராயிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (41). இவர் வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த போது, பீரோ திறக்கும் சத்தம் கேட்டதால் எழுந்து பார்த்த போது, திருட முயன்ற மர்மநபர் ஒருவர் அறையில் இருந்து வெளியே ஓடியுள்ளார். அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, கூமாபட்டி கொடிக்குளத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து நடத்துநரான மணிகண்டன் (24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


