News November 3, 2025
BREAKING: விஜய்யின் அணியில் இணைந்தனர்

கரூர் சம்பவத்தை தொடர்ந்து தவெகவில் உருவாக்கப்பட்ட தொண்டரணிக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற IG ரவிக்குமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் இணைந்துள்ளனர். உளவுப்பிரிவு உள்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, ஓய்வு பெற்ற DSP-க்கள் சஃபியுல்யா, சிவலிங்கம், ADSP அசோகன்(ஓய்வு) ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.
Similar News
News November 3, 2025
போனை காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டுறீங்களா?

குழந்தைகளுக்கு போனில் கார்ட்டூனை காட்டியபடி, சோறு ஊட்டும் பழக்கம் பல வீடுகளிலும் இருக்கிறது. ஆனால், ‘Screen Feeding’ எனப்படும் இப்பழக்கம் மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இம்முறையில் வளரும் குழந்தைகளுக்கு பேச்சு வருவது தாமதமாவது, கவனமின்மை, பெற்றோருடன் உணர்வுப்பூர்வமான தொடர்பு குறைவது போன்ற பிரச்னைகள் வரலாம் என எச்சரிக்கப்படுகிறது. இனிமே கவனமா இருங்க. இதை அனைவருக்கும் பகிருங்க.
News November 3, 2025
CA தேர்வு முடிவு வெளியானது

சார்ட்டர்ட் அக்கவுண்ட் (CA)-2025 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பரில் நடந்த CA படிப்பின் பவுண்டேஷன், இண்டர்மீடியட், மற்றும் பைனல் தேர்வுகளின் முடிவுகளை ICAI-யின் இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். https://icai.nic.in/caresult/ என்ற இணைய முகவரிக்கு சென்று மாணவர்கள் தங்களின் ரோல் நம்பர், ரெஜிஸ்டர் நம்பர் இரண்டையும் எண்டர் செய்து தேர்வு முடிவை பார்க்கலாம். SHARE IT
News November 3, 2025
SIR குறித்து அச்சப்பட தேவையில்லை: ECI

SIR மீது பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்று ECI தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் தகுதியற்றவர்களை நீக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, எதிர்பார்த்ததை விட SIR பணிகள் சிறப்பாக நடைபெறும் என ECI குறிப்பிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து வழக்குகளும் நவ.13-ல் விசாரிக்கப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.


