News January 30, 2026
BREAKING: வழக்கு தொடர்ந்தார் விஜய்

ரோடு ஷோ தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற விஜய்யின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, தவெக தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் பாரபட்சம் இருப்பதாக கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இடைஞ்சல்: உதயநிதி

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று DCM உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு என்கிற வார்த்தையே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனவும், மத்திய அரசு TN-ஐ பல வகைகளில் வஞ்சித்து, பல்வேறு இடைஞ்சல்களைக் கொடுத்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார். நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை முடிக்கும் முன்பே EPS பாராட்டு தெரிவித்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
News February 6, 2026
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஜன.28 அன்று அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, நாளை(பிப்.7 சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் விழாவிற்காக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய, கரூர் வட்டத்திற்கும் நாளை வேலைநாளாகும். ஏனைய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைதான்.
News February 6, 2026
பறவை எச்சிலை சூப் வைத்து குடிக்கிறாங்க.. எங்க தெரியுமா?

எச்சிலை வைத்து கூடு கட்டும் பறவைகள் தான் ஸ்விஃப்ட்லெட்(Swiftlets). அப்படி கட்டப்பட்ட அந்த கூட்டை, அறுவடை செய்து சூப் வைத்து சாப்பிடும் பழக்கம் சீனர்களிடையே இருக்கிறது. இதை ஜெல்லி, ஸ்வீட் போலவும் சாப்பிடும் அவர்கள், இது சுவையாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த பறவையின் எச்சிலில் அதிக சத்துகள் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். தாய்லாந்து, பாங்காக்கிலும் இந்த உணவு கிடைக்கும். உங்கள் கருத்து?


