News March 12, 2026
BREAKING: வங்கிக் கணக்கில் நாளை ₹2,000 வருகிறது

PM கிசான் திட்டத்தின் 22-வது தவணை நாளை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. நாடு முழுவதும் 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹18,640 கோடி நேரடியாக செலுத்தப்படவுள்ளது. அதனால், இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கில் E-KYC சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-24300606 எண்ணை அழைத்து ஆலோசனை பெறுங்கள்.
Similar News
News March 29, 2026
மதியம் அசைவம் சாப்பிட்டதும் தூங்கலாமா?

சிக்கன், மட்டன், மீன் என மதியம் நன்றாக சாப்பிட்டதும் தூக்கம் சொக்கும். ஆனால், உடனே தூங்கிவிட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அசைவம் கடினமான உணவு என்பதால், ஜீரணமாக நேரமாகும். எனவே, சாப்பிட்ட 30-45 நிமிடங்கள் கழித்து தூங்க வேண்டும். அதேபோல், குட்டி தூக்கம் மட்டுமே போட வேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்கள் தூங்கிக்கொள்ளலாம் என்கின்றனர். ஷேர் பண்ணுங்க.
News March 29, 2026
ஏப்.1 முதல் பான் கார்டில் வரும் மாற்றங்கள்.. Must Read

*புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டுடன் வாக்காளர் அட்டை, 10-ம் வகுப்பு மார்க் ஷீட் உள்ளிட்ட சில ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டி வரலாம்.
*ஆதார் கார்டிலுள்ள பெயரிலேயே பான் கார்டிலும் உங்கள் பெயர் இடம்பெறும்.
*புதிய கார்டு பெறுவதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் புதிய படிவங்கள் வழங்கப்படும். இந்த விதிகள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. SHARE IT.
News March 29, 2026
ஜெயலலிதாவுக்கு பிறகு விஜய் மட்டுமே செய்த செயல்

பெரம்பூர் & திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். 2 தொகுதிகளில் போட்டியிட காரணம், ஒன்றில் தோற்றுவிட்டால் மற்றொன்றில் ஜெயித்து பேரவைக்குள் நுழையலாம் என்பதே. 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முன்னதாக, 1991-ல் பர்கூர், காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர், பர்கூரில் MLA-வாக தொடர்ந்தார்.


