News November 11, 2025

BREAKING ராஜபாளையத்தில் 2 பேர் வெட்டிக் கொலை

image

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலின் இரவுநேர காவலாளியாக இருந்த பேச்சிமுத்து(50), சங்கரபாண்டியன்(65) ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் உண்டியல் சேதமாகி இருப்பதால் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற போது காவலர்களை தடுக்க முயன்ற போது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Similar News

News November 11, 2025

ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவம் நவ.8 அன்று தொடங்கியது. இந்நிலையில் 3 – ஆம் நாளான நேற்று கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News November 10, 2025

விருதுநகர்: VOTER ID-யில் இதை மற்ற வேண்டுமா?

image

விருதுநகர் மக்களே உங்க VOTER ID-ல் பழைய போட்டோ இருக்கிறதா? அதை மாற்ற வழி உண்டு.
<>இங்கு கிளிக் <<>>செய்யுங்க.
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும். இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க

News November 10, 2025

விருதுநகர்: சட்டவிரோத செயலை தடுக்க குழு அமைக்கப்படுமா?

image

விருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் சட்டவிரோதமாக விவசாய தோட்டங்களில் மின்வேலி அமைக்கப்பட்டதில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பல இடங்களில் சட்டவிரோதமாக மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க சட்டவிரோத மின்வேலிகளை கண்டறிந்து அகற்ற ஆய்வுக்கு சிறப்பு குழு அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!