News January 6, 2026
BREAKING: மீண்டும் புயல் அலர்ட்.. கனமழை வெளுக்கும்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது. இந்நிலையில், ஜன.9-ல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஜன.10-ல் பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.
Similar News
News January 31, 2026
விமானங்கள் பறக்க தடை.. அரசின் திடீர் உத்தரவு ஏன்?

பிப்.5,6-ல் வங்கக்கடலுக்கு மேல் சுமார் 3,190 km-க்கு விமானம் இயக்குவதற்கு NOTAM மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. வான்வெளியில் ஏற்படக்கூடிய அபாயம் பற்றி அறிவிக்க வெளியிடப்படும் அறிக்கைதான் NOTAM(Notice to Airmen). தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளதால் இந்தியா ஏவுகணையை சோதிக்க திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. Op.சிந்தூருக்கு பிறகு இந்தியா இப்படியான பல சோதனைகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
News January 31, 2026
நகைக் கடன்.. மக்களுக்கு அதிர்ச்சி

தங்கம் விலை பெரியளவில் மாற்றத்தை சந்தித்து வரும் சூழலில், TN-ல் பல மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கிராமப்புறங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட நகைக் கடன் பெற முடியாமல் மக்கள் தவிப்பதாக கூறப்படுகிறது. போதிய நிதியில்லை என்பதால் நகைக் கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. உங்க பகுதியிலும் பிரச்னை உள்ளதா?
News January 31, 2026
நிதிக்காக பாகிஸ்தான் பிச்சை எடுப்பது அவமானம்: பாக்., PM

நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பாகிஸ்தான் PM ஷெபாஸ் ஷெரீப் வெளிப்படையாக பேசியுள்ளார். பாகிஸ்தானின் பொருளாதாரத்தைச் சமாளிக்க உலக நாடுகளிடம் நிதியுதவி கேட்பது தமக்கும், ராணுவத் தளபதிக்கும் மிகுந்த மனவேதனையையும் அவமானத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடன் வாங்குவது நாட்டின் சுயமரியாதையை பாதிப்பதாகவும், வெளிநாடுகளிடம் கையேந்தும்போது தலைகுனிய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


