News January 24, 2026
BREAKING: மதுப்பிரியர்கள் கவனத்திற்கு…

TN முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் என ஐகோர்ட்டில் TN அரசு உறுதியளித்துள்ளது. இதுகுறித்த வழக்கில், தற்போது 28 மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் இருப்பதாகவும், 7 மாவட்டங்களில் இதனை எதிர்த்து ஊழியர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டிலை ₹10 அதிகம் கொடுத்து வாங்கி, பின்னர் காலி பாட்டிலை கொடுத்து பணத்தை திரும்ப பெறுவதே இந்த திட்டம்.
Similar News
News April 7, 2026
நாய் கடிக்கு தமிழ்நாட்டில் 13 பேர் பலி.. ஷாக் ரிப்போர்ட்!

TN-ல் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து ரேபிஸ் நோயால் 13 பேர் பலியாகியுள்ளனர். பள்ளி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தெருநாய்கள் கடிக்கு ஆளாகி வருகின்றனர். இது நகரங்களை விட கிராமங்களில் அதிகம் நடப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, கடந்தாண்டு 6,25,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 95 நாள்களில் மட்டும் 2,09,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
News April 7, 2026
பூனம் பாண்டேவின் ஐடியா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக வருவேன் என்பது உள்ளிட்ட பல சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பிரபலமானவர் பூனம் பாண்டே. இந்நிலையில், சரியோ தவறோ நம்மை பற்றி அனைவரும் பேச வேண்டும், அதற்கேற்ப நாமும் நடந்துகொள்ள வேண்டும் என பூனம் பாண்டே கூறியுள்ளார். இப்படி செய்தால் தான் சினிமாவில் நாம் கவனிக்கப்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிர்த்தும் கருத்துகள் பகிரப்படுகின்றன.
News April 7, 2026
குறுக்கு வழியில் எதிரிகளின் கீழ்தரமான செயல்: சுந்தர்.சி

தேர்தலில் வெற்றிபெற்றால் மதுரை மத்திய தொகுதியில் ‘இறைச்சி கடைகளை மூடுவேன்’ என தான் கூறியதாக வெளியாகும் செய்தி முற்றிலும் போலியானது என சுந்தர்.சி தெரிவித்துள்ளார். மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்க தெரிந்தவன் நான் என்பது மக்களுக்கே தெரியும். போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியமின்றி குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான செயல்களுக்கு வெற்றியால் பதிலடி தருவோம் என கூறியுள்ளார்.


