News October 21, 2025

BREAKING: புதுவையில் நாளை விடுமுறை அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 22, 2025

காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

image

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முதல் இடை விடாமல் கனமழையானது பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்படைந்தது. இதனை அடுத்து பாதிப்படைத்த பகுதிகளை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News October 21, 2025

புதுச்சேரி: கொட்டும் மழையில் முதல்வர் அஞ்சலி

image

புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் கொட்டும் கன மழையில், இன்று நடைபெற்ற காவலர் நினைவு தின நிகழ்ச்சியில், கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மழையில் நனைந்தபடி பணியின்போது உயர் நீத்த காவலர்களுக்கு, மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார்கள்.

News October 21, 2025

காரைக்கால்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்பும்படியும் காரைக்கால் மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!