News August 19, 2024
BREAKING பல்லடத்தில் விபத்து: ஒருவர் பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் பகுதியில் திருச்செங்கோட்டிலிருந்து பொள்ளாச்சி நோக்கி கார் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரானது எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஓட்டிச் சென்ற சதீஸ் (42) உயிரிழந்தார். மேலும் லாரி சாலையில் கவிழ்ந்ததில் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், <
News November 9, 2025
திருப்பூரில் கைது! ஏன் தெரியுமா?

அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி, கணேசபுரம் வைஷ்ணவி கார்டனில், வெளிநாட்டினர் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் படி நேற்று முன்தினம் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு உள்ளிட்ட போலீசார் வீடுகளில் சோதனை நடத்தினர். அதில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
News November 9, 2025
திருப்பூரில் இங்கெல்லாம் மின்தடை

உடுமலை இந்திரா நகர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை நவ.10-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதூர். ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், தூங்காவி, ராமேகவுண்டன் புதூர், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.


