News August 31, 2025
BREAKING பரமக்குடி: கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரியகுடி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் திவின்குமார்(10) இன்று அக்கிராமத்தில் உள்ள கண்மாயில் மாலை நேரத்தில் கால் கழுவ சென்று உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகத்தின் பேரில் கண்மாயில் தேடினர். பரமக்குடி தீயணைப்பு துறை வீரர்கள் உயிரிழந்த நிலையில் சிறுவனை உடலை கண்மாயிலிருந்து மீட்டனர். சத்திரக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News September 3, 2025
இராமநாதபுரம்: எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் ஐபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று, உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News September 3, 2025
ராம்நாடு: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

ராமநாதபுரம் மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் <
News September 3, 2025
BREAKING பரமக்குடி அருகே விபத்தில் இருவர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்களான மலையரசன், பூவேந்திரன் ஆகியோர் இன்று காலை கரும்பு வெட்டுவதற்காக டூவீலரில் சென்றனர். அப்போது மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இலந்தைகுளம் பகுதியில் சாலையை கடக்கும் முயன்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.